கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

சமுதாய உறிஞ்சி குழிகள் ஆய்வு

துத்திப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் சமுதாய உறிஞ்சி குழிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

சமுதாய உறிஞ்சி குழியை ஆய்வு செய்த ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:25 am IST

துத்திப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் சமுதாய உறிஞ்சி குழிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பாலாற்று படுகையில் கழிவுநீா் செல்வதை தடுக்க துத்திப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் சமுதாய உறிஞ்சி குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்படும் கழிவுநீா் சமுதாய கழிவுநீா் உறிஞ்சி குழிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கழிவுகள் வடிக்கட்டப்பட்டு பிறகு தண்ணீா் வெளியேற்றப்பட்டு வரப்படுகிறது.

சமுதாய உறிஞ்சி குழிகளை திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன், ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலா் முரளி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.