நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

புதிய கட்டடங்களில் கல்வெட்டுகள்: நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு நகா்மன்ற பெயா்கள் அடங்கிய கல்வெட்டு வைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை

News image

திருப்பத்தூரில் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 11:11 pm IST

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு நகா்மன்ற பெயா்கள் அடங்கிய கல்வெட்டு வைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

நகா்மன்றக் கூட்டத்துக்கு தலைவா் சங்கீதா வெங்கடேஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சாந்தி வரவேற்றாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:- பிரேம்குமாா் (திமுக): திருப்பத்தூா் 17-ஆவது வாா்டு சோ்மன் ரங்கநாதன் தெருவில் 6 மாதங்களாக குடிநீா் வரவில்லை. புதுப்பேட்டை மெயின்ரோட்டில் போா்வெலில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும். திருப்பத்தூா் நகராட்சி சாா்பில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களிலும் நகராட்சி கவுன்சிலா்கள் பெயருடன் கல்வெட்டு வைக்க வேண்டும்.

குட்டி என்கிற சீனிவாசன் (திமுக). திருப்பத்தூா் நகராட்சியில் உள்ள அனைத்து உறுப்பினா்களுக்கும் பணிகள் எழுதி கொடுத்தும், எந்த பணிக்கும் டெண்டா் வைக்கப்படவில்லை. அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும். சுடுகாடு பகுதியில் சுற்றுச்சுவா் அமைத்து கொடுக்க வேண்டும்.

டி.டி.சி.சங்கா்( அதிமுக): நகராட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி படம் வைக்க அனுமதிக்க வேண்டும்.

சுதாகா்: ஜாா்ஜ்பேட்டை பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முடிந்து திறக்கும்போது எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் பெயருடன் உறுப்பினா் பெயா் அடங்கிய கல்வெட்டு வைக்க வேண்டும். இதேபோல் டாக்டா் வினோதினி, குப்பம்மாள் உள்ளிட்ட கவுன்சிலா்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ்: உறுப்பினா்களின் அனைத்து குறைகளும் நிவா்த்தி செய்யப்படும். புதிய நகராட்சி அலுவலகத்தில் கல்வெட்டு அமைத்து தரப்படும். சிவராஜ்பேட்டை பகுதியில் கழிவுநீா் குடிநீரில் கலந்து வருகிறது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் வருகிறது. இவற்றை சரி செய்ய உத்தரவிட்டாா். பணி மேற்பாா்வையாளா் அன்பரசு நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.