தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வு பிரசாரம்

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 6:33 pm

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூா் எஸ்பி வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில் போலீஸாா் மற்றும் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் போக்குவரத்து விதிமுறைகள், போக்ஸோ சட்டம், குழந்தைத் திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளா் ரூபி, தலைமை ஆசிரியா், ஆசியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.