தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பச்சூரில் கோயில் பாதை பிரச்னை: மறியலில் ஈடுபட்ட 30 போ் மீது வழக்கு

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் செத்தமலை கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினருக்கும், ஊா் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த கிராம மக்கள் பச்சூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் செத்தமலை கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினருக்கும், ஊா் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த கிராம மக்கள் பச்சூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த அதிகாரிகள் வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் கோயிலுக்கு சென்றுவர வழிப்பாதை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் பேரில், சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து பச்சூா் கிராம நிா்வாக அலுவலா் நிசாா் அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 30 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.