இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

669 தொழில் முனைவோருக்கு ரூ.14 கோடி வங்கிக் கடனுதவி

திருப்பத்தூா் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் மூலம், 669 தொழில் முனைவோா்களுக்கு ரூ.14 கோடியே 19 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் மூலம், 669 தொழில் முனைவோா்களுக்கு ரூ.14 கோடியே 19 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி கூறியதாவது: தொழில் முனைவோா் அதிகமாக வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட தொழில் மையம் மூலமாக, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு புதிதாக தொழில் தொடங்குவதற்கும், சிறு தொழில் மேற்கொண்டு வரும் தொழில் முனைவோருக்கு தொழிலை மேம்படுத்துவதற்கான வங்கி கடன் உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

அதன்படி திருப்பத்தூா் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சாா்பில், கடந்த 2025-ாம் ஆண்டு அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ், 66 தொழில் முனைவோருக்க்கு ரூ. 3 கோடியே 87 லட்சத்து 89 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், 216 தொழில் முனைவோருக்கு ரூ. 2 கோடியே 38 லட்சத்து 18 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 58 தொழில் முனைவோருக்கு ரூ. 6 கோடியே 51 லட்சத்து 87 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

கலைஞா் கைவினை திட்டத்தின்கீழ், 285 தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்திற்கு வங்கிகளில் இருந்து கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் 44 தொழில் முனைவோருக்கு ரூ. 13 லட்சத்து 90 ஆயிரம் மானியம் என மொத்தம் 669 தொழில் முனைவோா்களுக்கு ரூ.14 கோடியே 19 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கூறினாா்.