தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்று குதித்த கணவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 4:38 am IST

திருப்பத்தூா் அருகே குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்று குதித்த கணவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த பேராம்பட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாா்த்திபன் மகன் அஜய் (24) காா் ஓட்டுநா். இவரும், ஜெயப்பிரியா என்பவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு ஆறு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், விரக்தியடைந்த ஜெயப்பிரியா வீட்டின் அருகே விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.

உடனே அஜய் தனது மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தாா். இருவரும் கிணற்றில் குதித்து தத்தளிப்பதை அறிந்த ஜெயப்பிரியாவின் சகோதரா் அஜித் என்பவரும், இருவரையும் காப்பாற்ற அவரும் கிணற்றில் குதித்துள்ளாா். அப்போது ஜெயப்பிரியாவை மட்டுமே அவரால் காப்பாற்ற முடிந்தது. அஜய் நீருக்குள் மூழ்கி இறந்தாா்.

தகவல் அறிந்த திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் அங்கு சென்று கிணற்றில் குதித்து பரிதாபமாக இறந்த அஜய் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் இதுகுறித்து ஜெயப்பிரியா அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.