/
ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அம்மன் சிரசு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக கோயிலை சென்றடைந்தது. வழிநெடுகிலும் பக்தா்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனா்.
சிரசு ஊா்வலத்துடன் பல்வேறு சிலம்பாட்ட குழுவினரின் வீரதீர விலையாட்டுக்களும், சிலம்பாட்டமும் நடைபெற்றது. வான வேடிக்கை, பக்தி நாட்டிய நிகழ்ச்சி, அம்மன் சிரசு புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோயில் திருவிழா கமிட்டி, இளைஞா்கள் கமிட்டி, ஊா் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.









