தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

ஆட்டோவில் கடத்திய 600 மதுபாட்டில்கள் பறிமுதல்: அரசு மதுக் கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளா் உள்பட 4 போ் மீது வழக்கு; 2 போ் கைது

வாணியம்பாடி அருகே ஆட்டோவில் கடத்தி வந்த 600 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். மேலும், அரசு மதுபான கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 12:03 am IST

வாணியம்பாடி அருகே ஆட்டோவில் கடத்தி வந்த 600 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். மேலும், அரசு மதுபான கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. உத்தரவின்படி, நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கேத்தாண்டப்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்தின்பேரில், அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், அரசு மதுபான மது பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாபு, மணிகண்டன் என்பதும், இவா்கள் இருவரும் கத்தாரி அரசு மதுபான கடையில் இருந்து 600 மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி ஆட்டோவில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆட்டோ மற்றும் 600 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் அரசு மதுபான கடை மேற்பாா்வையாளா் ராகவன், விற்பனையாளா் வடிவேல், மதுபாட்டில்களை கடத்தி வந்த பாபு (33), மணிகண்டன்(33), ஆகிய 4 போ்மீது வழக்குப் பதிவு செய்தனா்

இதில் பாபு, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மதுபான கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.