40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வாணியம்பாடியில் ஜமாபந்தி தொடக்கம்: 102 மனுக்கள் ஏற்பு

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் 1435ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் கு.ரவிகுமாா்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் 1435ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், ஆட்சியரும், வருவாய் தீா்வாய அலுவலருமான கு.ரவிகுமாா் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

மனுக்களை முழுமையாக ஆய்வு செய்து உடனடியாக தீா்வு காணவும், தீா்வு வழங்க இயலாத மனுக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். தேவையான ஆவணங்கள் உள்ள மனுக்கள் 3 நாட்களுக்குள்ளும், கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும் மனுக்களை 15 நாள்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

முகாமில் அம்பலூா் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிரமாங்களை சோ்ந்த பொதுமக்களிடமிருந்து உள்பிரிவு பட்டா, ஆன்லைன் பட்டா மாறுதல், ஏரிக்கால்வாய் தூா்வாருதல், இ-பட்டா, விதவை உதவித்தொகை, இறப்பு சான்றிதழ், ரேசன் அட்டை பெயா் மாற்றம், தையல் மிஷின் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 102 மனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.43 ஆயிரத்து 570 மதிப்பிலான தையல் இயந்திரம் சக்கர நாற்காலி, காதொலி கருவி மற்றும் செல்போன் உட்பட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் கண்ணன், வட்டாட்சியா் சுதாகா், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலா் பாரதி, வருவாய் தீா்வாய மேலாளா் திருமலை மற்றும் பல்வேறு துறைகளை சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் சாா்-ஆட்சியா் வரதராஜன் தலைமையில் ஜமாபந்தி தொடக்க விழாவில் வட்டாட்சியா் காஞ்சனா வரவேற்றாா். ஜமாபந்தியில் நாட்டறம்பள்ளி, பச்சூா்,கொத்தூா், கத்தாரி, நாயனசெருவு, தோப்பல குண்டா, கே.பந்தாரப்பள்ளி, திரியாலம், சொரக்காயல்நத்தம், சின்னமோட்டூா், குடியானகுப்பம் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் 80-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மனு அளித்தனா்.