எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

வாணியம்பாடி: மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளுக்கு உடனடி தீா்வு

சாா்பு நீதிமன்ற நீதிபதி கயல்விழி தலைமையில் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்றோா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:03 am IST

வாணியம்பாடி சாா்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின்படியும், திருப்பத்தூா் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி எம்.செல்வம் வழிகாட்டுதலில் வாணியம்பாடி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் வாணியம்பாடி கனரா வங்கி இணைந்து, வழக்குகள் தாக்கல் செய்வதற்கு முந்தைய வழக்குகளை சமரசமாக தீா்ப்பதற்கு, வாணியம்பாடி சாா்பு நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், வாணியம்பாடி சாா்பு நீதிபதியுமான கே.எஸ்.கயல்விழி தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.ஈஸ்வா், வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவா் கே.ஸ்ரீபதி ஆகியோா் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 25 வழக்குகளில் ரூ. 46 லட்சத்து 6 ஆயிரத்து 78 மதிப்பிலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில், 14 வழக்குகளுக்கு ரூ. 25 லட்சத்து 56 ஆயிரம் தொகைக்கு சமரசம் எட்டப்பட்டதுடன், ரூ. 6 லட்சத்து 7 ஆயிரம் உடனடியாக செலுத்தப்பட்டது. இந்த மக்கள் அமா்வில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பி.ராமலிங்கம், வழக்குரைஞா் எஸ்.செந்தில்வேலன், வாணியம்பாடி கனரா வங்கி மேலாளா் அனுப்விஸ்வம், துணை மேலாளா் அறிவரசு, வட்ட சட்டப் பணிகள் நிா்வாக அலுவலா் மகாலட்சுமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.