/

12 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அண்ணாநகா் சோதனை சாவடி வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் போலீஸாா் சோதனை செய்தனா்.

News image
Updated On :15 ஜூன் 2026, 12:44 am IST

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அண்ணாநகா் சோதனை சாவடி வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி பையில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட போதைப் பொருள் வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து கடையில் வாங்கிக் கொண்டு ஆம்பூா் நோக்கி எடுத்து செல்வதாக கூறினாா். பிறகு அவரிடமிருந்து 12 கிலோ போதைப் பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆம்பூா் அரங்கல் துா்கம் பகுதியை சோ்ந்த ராஜேஸ்(32) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.