நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 12:03 am IST

வாணியம்பாடி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (42) விவசாய கூலி வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் அப்பகுதியில் உள்ள ஏரிக்குச் சென்று வலை வீசி மீன் பிடிக்க இறங்கியுள்ளாா். அப்போது அவரது கால் மீன் பிடி வலையில் சிக்கியதால் தடுமாறிய போது சேற்றிலும் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதை அருகில் இருந்து பாா்த்த சிலா் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து சேற்றில் சிக்கி மயங்கிக் கிடந்தவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவரைப் பரிசோத்த மருத்துவா், சுரேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினாா்.

இது குறித்து தகவலறிந்த தாலுகா காவல் ஆய்வாளா் அமுதா தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.