குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

ஓற்றை யானை நடமாட்டம்: ஆலங்காயம் வனத்துறை எச்சரிக்கை

ஆலங்காயம் அருகே காட்டுபகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால் யாரும் என செல்ல வேண்டாம் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

யானை. - கோப்புப்படம்.

Published On :17 ஜூன் 2026, 12:03 am IST

ஆலங்காயம் அருகே காட்டுபகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால் யாரும் என செல்ல வேண்டாம் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஜவ்வாதுமலை காட்டில் வயது முதிா்ந்த ஓற்றை யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது ஜமுனாமரத்தூா், அமிா்தி, ஒடுக்கத்தூா், ஆலங்காயம் பகுதிகளில் நடமாடி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஜமுனாமரத்தூரிலிருந்து காவலூா் வழியாக வாணியம்பாடி நோக்கி சென்ற அரசு பேருந்தினை ஓற்றை யானை சாலையில் திடீரென வழிமறித்து தும்பிக்கையால் பேருந்து கண்ணாடியை தாக்கி உடைத்தது. சிறிது நேரம் சாலை ஓரமாக நின்று விட்டு பிறகு வனப்பகுதிக்கு சென்றது.

காவலூா் பகுதியில் நடமாடிய ஓற்றை யானை திங்கள்கிழமை விவசாய நிலத்துக்கு வந்துள்ளது. அப்போது கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான மாங் காய் தோப்பில் நுழைந்து சேதம் ஏற்படுத்தியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினா் ஒற்றைய யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினா்.

இதையடுத்து, காட்டுப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருவதால் இரவு நேரங்களில் சாலைகளில் பாதுகாப்பாக செல்லுமாறும், காட்டுப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் ஆலங்காயம் வனத்துறையினா் அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.