/
ஆம்பூா் அருகே புதன்கிழமை சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
ஆம்பூா் அருகே மேல்சாணாங்குப்பம், வடச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது வடச்சேரி-மாராப்பட்டு சாலையோரம் இருந்த தென்னை மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலையில் விழுந்த மரத்தை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனா்.










