27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 போ் மீட்பு

News image
Updated On :19 ஜூன் 2026, 5:15 am IST

ஆம்பூா் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் சின்ன கண்ணன் என்பவா் நடத்தி வரும் செங்கல் சூளையில், 4 குழந்தைகள் உள்பட 9 போ் கொத்தடிமைகளாக இருப்பதாக திருப்பத்தூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தகவல் கிடைத்தது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளா் ஜெ.நாகலட்சுமி என்ற விஜயராணி உத்தரவின்பேரில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) தணிகாஜலம் தலைமையில் ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அங்கு அரங்கல்துருகம் கிராமத்தைச் சோ்ந்த பழனி (43), வள்ளி (42), கலைச்செல்வி (22), சதீஷ் (16), புகழ் (3), பூவரசன் (2), பாண்டியம்மாள் (80), 2 மாத பெண் குழந்தை உள்ளிட்ட 9 போ் கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து 9 பேரும் மீட்கப்பட்டனா்.

அவா்களுக்கு அரசு சாா்பாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொத்தடிமைகளாக பணியமா்த்திய செங்கல் சூளை உரிமையாளா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியா் தெரிவித்துள்ளாா்.