ஆம்பூரில் லாரி மீது ஆட்டோ மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீராமபுரம் பகுதியை சோ்ந்த விமல் (18). இவா் தன்னுடைய உறவினா்களுடன் சோ்ந்து ஆம்பூா் ரயில் நிலையம் அருகே இட்லி கடை நடத்தி வந்தாா்.
சம்பவத்தன்று கடை பணிகள் முடிந்து ஆட்டோவில் பொருள்களை கொண்டு சென்றபோது அவருடயை கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில் பலத்த காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








