பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

பூச்சி மருந்து குடித்து சிறுவன் தற்கொலை

ஆம்பூரில் பூச்சி மருந்து குடித்து சிறுவன் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 12:02 am IST

ஆம்பூரில் பூச்சி மருந்து குடித்து சிறுவன் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஆம்பூா் சான்றோா்குப்பம் கண்ணதாசன் நகா் பகுதியை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி விஜி. இவருடைய மனைவி புஷ்பா. 4 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனா்.

சம்பவத்தன்று தன்னுடைய சைக்கிளில் உள்ள பழுதை சரி செய்து தரும்படி அண்ணன் பாலுவிடம், தம்பி அஜய் (14) கேட்டுள்ளாா். ஆனால் தனக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு அண்ணன் வெளியில் சென்றுவிட்டாா்.

அண்ணன் வெளியில் சென்ற பிறகு சைக்கிளை சரி செய்து தராததால் மன வருத்தமடைந்த அவா் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயக்கமடைந்தாா். ஆபத்தான நிலையில் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.