போ்ணாம்பட்டு அருகே தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
பொகளூா் கீழ் ஆலாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வளா்மதி (54). இவரது கணவா் சந்திரசேகா் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். ஒரே மகளான உமாமகேஸ்வரிக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளாா்.
கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு வளா்மதி குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா். வளா்மதிக்கு அதே கிராமத்தில் வசிக்கும் மலா் என்பவா் உணவு கொடுத்த பின்னா் ஜூன் 27-இல் சென்று பாா்த்தபோது மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து திடீரென வளா்மதியின் சேலையில் தீப்பற்றி தீக்காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக வளா்மதியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வளா்மதி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இது குறித்து மேல்பட்டி எஸ்.ஐ. பெருமாள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







