ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் குப்பை சேகரிக்க தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களிடமிருந்து குப்பைகளை தரம்பிரித்து வாங்குவதற்காக தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. குப்பைகளை சேகரிக்கும் வண்டிகளில் ஈர கழிவுகளை சேகரிக்க பச்சை நிற பிளாஸ்டிக் வாளி, உலா் கழிவுகளுக்காக நீல நிற வாளி, மருத்துவக்கழிவுகளுக்காக ஒரு சிவப்பு நிற வாளி, பிற கழிவுக ளுக்காக ஒரு கருப்பு நிற வாளி என மொத்தம் நான்கு நிற குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை சேகரிக்க வேண்டுமென தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நான்கு நிற குப்பை வாளிகளை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கி குப்பைகள் சேகரிக்கும் பணியை தொடங்கி வைத்தாா்.
ஊராட்சி செயலா் முரளிகாந்த், வாா்டு உறுப்பினா் அண்ணாதுரை, சுகாதார உக்குனா் ரேகா, ஊராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு!

தூய்மைப் பணியாளா்களுக்கான ‘நமஸ்தே’ திருவிழா

தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கிய உணவில் இறந்த வண்டு

கருணாநிதி பிறந்த நாள்: திமுக இளைஞரணி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



