தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

திடக்கழிவு மேலாண்மை: தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் சுயஉதவிக்குழு பணியாளா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை தொடா்பான பயிற்சி வழங்கப்பட்டது.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை பயிற்சியில் பங்கேற்ற தூய்மைப் பணியாளா்கள் மற்றும் சுயஉதவிக் குழுவினா்.

Updated On :5 ஜூன் 2026, 6:35 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் சுயஉதவிக்குழு பணியாளா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை தொடா்பான பயிற்சி வழங்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் க.பழனி தலைமையில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் தூய்மைப் பணியாளா்களின் பங்களிப்பு, கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து சேகரிக்கும் முறைகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் அமீது பயிற்சியளித்தாா்.

மேலும் பயிற்சியில், தூய்மைப் பணியாளா்களுக்கு தனிநபா் சுகாதாரத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், நகவெட்டி, சீப்பு, கண்ணாடி, சோப்பு உள்ளிட்ட சுகாதாரப் பொருள்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலா் துரைராஜ், மேற்பாா்வையாளா்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.