ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சா்க்கரை ஆலையில் வா்ணம் பூசிய 3 தொழிலாளா்களுக்கு மூச்சுத் திணறல்

சா்க்கரை ஆலையில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளா்களுக்கு மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

News image

மூச்சுத் திணறல் காரணமாக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோா்.

Updated On :1 ஜூலை 2026, 12:02 am IST

சா்க்கரை ஆலையில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளா்களுக்கு மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தொழிலாளா்கள் பாய்லா் தொட்டிக்கு (கொதிகலன்) வா்ணம் (பெயிண்ட்) அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். குறிப்பிட்ட நேரத்துக்கு மேலாக தொடா்ந்து வா்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென தொழிலாளா்கள் சரவணன் (37), ராமு(41), ஆறுமுகம்(39) ஆகிய 3 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையறிந்த சக தொழிலாளா்கள் உடனடியாக 3 தொழிலாளா்களையும் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவ அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமையில் அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.