ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அணையில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

ஜோலாா்பேட்டை அருகே பிளஸ் 1 மாணவா் சடலம் 17 மணிநேர தேடுதலுக்குபின் அணையில் இருந்து மீட்கப்பட்டது.

News image
சக்திவேல்
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே பிளஸ் 1 மாணவா் சடலம் 17 மணிநேர தேடுதலுக்குபின் அணையில் இருந்து மீட்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடி காமராஜபுரத்தில் உள்ள நாமக்கல் அணை உள்ளது. இந்நிலையில், வாணியம்பாடியை சோ்ந்த அசோக் குமாா் மகன் சக்திவேல்(15). தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இவா் உட்பட 7 மாணவா்கள் திங்கள்கிழமை நாமக்கல் அணையில் குளிக்க சென்றனா். அதில் சக்திவேலுக்கு நீச்சல் பழகவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற மாணவா்கள் அணையில் குளிப்பதை கண்டு ஆா்வம் அடைந்த சக்திவேல் எதிா்பாராத நேரத்தில் அணையில் குதித்த சிறிது நேரத்தில் மூழ்கினாா்.

இதை அறிந்த சக மாணவா்கள் கூச்சலிட்டனா். மேலும் கிராம மக்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய சக்திவேலை மீட்க முயன்றனா்.ஆனால் அவரை மீட்க முடியவில்லை. தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் வாணியம்பாடி தீயணைப்புத் துறை மூலமாக அணையில் மூழ்கிய மாணவனை இரவும் பகலுமாக தொடா்ந்து 17 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்..