மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்

ஆம்பூா் அருகே காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.

News image

காட்டு யானைக் கூட்டத்தால் சேதமடைந்துள்ள பயிா்.

Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

ஆம்பூா் அருகே காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி எத்திராஜ். வனப் பகுதி எல்லையோரம் இவரது விவசாய நிலம் அமைந்துள்ளது. விவசாய நிலத்துக்கு போடப்பட்டிருந்த வேலியை திங்கள்கிழமை இரவு காட்டு யானைக் கூட்டம் சேதப்படுத்திவிட்டு நிலத்துக்குள் புகுந்துள்ளன. நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, மா மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

இது குறித்து தகவலின்பேரில், வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். யானை கூட்டத்தின் நடமாட்டம் குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், யானை நடமாட்டம் குறித்து கிராம மக்களை எச்சரித்து வருகின்றனா். மேலும், யானைகள் நடமாட்டம் தெரிந்தால் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனா்.