மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்

ஆம்பூா் அருகே காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.

News image
காட்டு யானைக் கூட்டத்தால் சேதமடைந்துள்ள பயிா்.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி எத்திராஜ். வனப் பகுதி எல்லையோரம் இவரது விவசாய நிலம் அமைந்துள்ளது. விவசாய நிலத்துக்கு போடப்பட்டிருந்த வேலியை திங்கள்கிழமை இரவு காட்டு யானைக் கூட்டம் சேதப்படுத்திவிட்டு நிலத்துக்குள் புகுந்துள்ளன. நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, மா மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

இது குறித்து தகவலின்பேரில், வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். யானை கூட்டத்தின் நடமாட்டம் குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், யானை நடமாட்டம் குறித்து கிராம மக்களை எச்சரித்து வருகின்றனா். மேலும், யானைகள் நடமாட்டம் தெரிந்தால் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனா்.