மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சண்முகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

ஆம்பூா் சான்றோா்குப்பம் பட்டரை, சாமியாா் மடம் அருள்மிகு ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி தெய்வானை சமேத சண்முகநாத சுவாமி

Updated On :8 மார்ச் 2026, 6:36 pm

ஆம்பூா் சான்றோா்குப்பம் பட்டரை, சாமியாா் மடம் அருள்மிகு ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. 2-ம் நாள் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் விமான கும்பாபிஷேகம், வள்ளி தெய்வானை சமேத சண்முகநாத சுவாமி கோயில் மூலவா், போகா் சித்தா், அருணிகிரநாதா், பாம்பன் சுவாமிகள், சீரடி சாய்பாபாவுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சண்முகநாத சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கோயில் விழாக்குழு தலைவா் ஆா். ஜெயசீலன், செயலாளா் ஜெ. வேல்முருகன், பொருளாளா் கே.ஜி. முரளிகிருஷ்ணா, கோயில் அா்ச்சகா் அப்பு ஐயா் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.