ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ரூ.65.98 கோடியில் ரயில்வே மேம்பாலத்துக்கு அடிக்கல்

ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லேகம் ரயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

News image

ஆம்பூரில் ரயில்வே மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On :9 மார்ச் 2026, 9:03 pm

ஆம்பூா்: ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லேகம் ரயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

விழாவுக்கு நெடுஞ்சாலைகள் துறை தலைமை பொறியாளா் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லேகம் பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைகள் துறை சாா்பாக ரூ.65.98 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் அடிக்கல் நாட்டினாா்.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா் மன்ற உறுப்பினா்கள் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், என்.எஸ். ரமேஷ், லட்சுமி, நவநீதம், அம்சவேணி ஜெயக்குமாா், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி தாளாளா் பிா்தோஸ் கே. அஹமத், மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிக்குமாா், மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி தப்ரேஸ் அஹமத், விசிக மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம், ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு, நகராட்சி ஆணையாளா் முத்துசாமி கலந்து கொண்டனா்.