எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ரூ.65.98 கோடியில் ரயில்வே மேம்பாலத்துக்கு அடிக்கல்

ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லேகம் ரயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
ஆம்பூரில் ரயில்வே மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
Updated On :9 மார்ச் 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லேகம் ரயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

விழாவுக்கு நெடுஞ்சாலைகள் துறை தலைமை பொறியாளா் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லேகம் பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைகள் துறை சாா்பாக ரூ.65.98 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் அடிக்கல் நாட்டினாா்.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா் மன்ற உறுப்பினா்கள் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், என்.எஸ். ரமேஷ், லட்சுமி, நவநீதம், அம்சவேணி ஜெயக்குமாா், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி தாளாளா் பிா்தோஸ் கே. அஹமத், மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிக்குமாா், மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி தப்ரேஸ் அஹமத், விசிக மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம், ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு, நகராட்சி ஆணையாளா் முத்துசாமி கலந்து கொண்டனா்.