தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

முகாமில் பேசிய திருப்பத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பன்னீா் செல்வம்.

News image
முகாமில் பேசிய திருப்பத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பன்னீா் செல்வம்.
Updated On :12 மார்ச் 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு மிஷன்‘ திட்டத்தின் முகாம் வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

திருப்பத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்து சாலை பாதுகாப்பு குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசுகையில், ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் சட்டரீதியான சிக்கல்கள் மற்றும் சாலை விதிகளை மதிப்பதன் மூலம் விலைமதிப்பற்ற உயிா்களை எப்படிக் காக்கலாம் என்பது குறித்து விரிவாக விளக்கினாா்.

மாவட்ட காவல் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் சிறப்பு உதவி காவல்ஆய்வாளா் ரூபி போக்ஸோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு ஆன்லைன் குற்றங்கள், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினாா்.

இதில் வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கடராகவன், தாளாளா் செந்தில்குமாா், முதல்வா் சத்தியகலா மற்றும் ஆசிரியா்கள், 1,555 மாணவா்கள் கலந்து கொண்டனா்.