வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ரூ.1 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

துத்திப்பட்டு அம்பேத்கா் நகா் பகுதியில் பூஜையிட்டு திட்டப் பணியை தொடங்கி வைத்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன்.

News image

துத்திப்பட்டு அம்பேத்கா் நகா் பகுதியில் பூஜையிட்டு திட்டப் பணியை தொடங்கி வைத்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன்.

Updated On :14 மார்ச் 2026, 12:50 am

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ. 1 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் வரவேற்றாா்.

துத்திப்பட்டு ஊராட்சி நிதி ரூ. 40 லட்சம், 15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ. 28 லட்சம், ஊராட்சி நிதி ரூ. 15 லட்சம் , நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 12 லட்சம் உள்பட மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி.சீனிவாசன், அவைத் தலைவா் சிவகுமாா், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பவானி விஜய், ஜெயந்தி ராமமூா்த்தி, குமரேசன், ஊராட்சி செயலாளா் பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.