எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை

வாணியம்பாடி, புத்துகோயில், கலந்திரா உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

News image

கோப்புப்படம்.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

வாணியம்பாடி, புத்துகோயில், கலந்திரா உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால், பிற்பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமும் குறைந்தது. இந்நிலையில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் மேக மூட்டடமாக இருந்து வந்த நிலையில் திடீா் பலத்த காற்று வீசியது.

அப்போது அடுத்தடுத்து இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. இதில் தும்பேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னை மரத்தில் இடி தாக்கியதால் தீ பிடித்து எரிந்தது.

இதே போன்று வாணியம்பாடி அடுத்த சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள புத்துக்கோயில் மற்றும் வாணியம்பாடி-திருப்பத்தூா் சாலையில் உள்ள கலந்திரா உட்பட பகுதிகளில் 10 நிமிஷ்த்திற்கும் மேல் ஆலங்கட்டி மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.