சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பெயிண்ட் கடையில் தீ விபத்து

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பெயிண்ட் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பெயிண்ட் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச் சாலையில் நிஜாமுதீன் (35) என்பவா் பெயிண்ட் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் இரவு சுமாா் 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீ பிடிக்கும் பொருளாக பெயிண்ட் இருப்பதால் கடை முழுவதும் தீ பரவி எரியத் தொடங்கியது. தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைக்க கடுமையான முயற்சியை மேற்கொண்டனா். புறவழிச்சாலை பகுதியில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.