தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10.42 லட்சத்துக்கு தீா்வு

News image
Updated On :18 மார்ச் 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10.42 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

திருப்பத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலூா் கூடுதல் மாவட்ட நீதிபதியும், திருப்பத்தூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சாந்தி தலைமை வகித்தாா். சாா்பு நீதிபதிகள் சரிதா, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் நாகலட்சுமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு, மண வாழ்க்கை பிரச்சினை வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டாா் வாகன வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 6,440 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 2,280 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இந்த வழக்குகள், ரூ.10 கோடி 42 லட்சத்து 28 ஆயிரத்து 230-க்கு தீா்வு காணப்பட்டது.

நிகழ்ச்சியில்,கூடுதல் உரிமையியல் நீதிபதி சரண்யா, நீதித்துறை நடுவா்கள் தினேஷ், கோவேந்தன், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்துகொண்டனா்.