தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோ்தல் பறக்கும் படை சோதனை: தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

News image
Updated On :18 மார்ச் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை மேற்கொள்வதை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு செய்தாா்.

தோ்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டுச்செல்லப்படுவதை தடுக்க கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொள்வதை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000க்கும் அதிகமான ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும், ஆவணங்களின்றி கொண்டு செல்வது தெரிய வந்தால் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.