தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழக-ஆந்திர எல்லை சோதனைச் சாவடிகளில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வு

வாணியம்பாடி அடுத்த கொல்லப்பள்ளி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் சுனாராம்.

News image

வாணியம்பாடி அடுத்த கொல்லப்பள்ளி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் சுனாராம்.

Updated On :19 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தகரகுப்பம், கொல்லப்பள்ளி ஆகிய பகுதிகளில் காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, அதன் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் சுனாராம் கொல்லப்பள்ளி, தகரகுப்பம் ஆகிய சோதனைசாவடியில் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.