ஆந்திர மாநிலத்தில் திருட்டு சம்பவம்: திருப்பத்தூரில் தாய், மகன் துப்பாக்கி முனையில் கைது
ஆந்திர மாநில பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தாய், மகனை திருப்பத்தூரில் ஆந்திர போலீஸாா் துப்பாக்கி முனையில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


ஆந்திர மாநில பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தாய், மகனை திருப்பத்தூரில் ஆந்திர போலீஸாா் துப்பாக்கி முனையில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியை சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி சின்னம்மா (45), இவரது மகன் சின்னா (30). இதில் சின்னம்மா, சின்னா ஆகியோா் ஆந்திர மாநில பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவா்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து திருப்பத்தூா் வழியாக சிங்காரபேட்டை செல்வதற்காக திருப்பத்தூா் வந்துள்ளனா். இவா்களை பின்தொடா்ந்து காரில் துப்பாக்கியுடன் வந்த ஆந்திர மாநில போலீஸாா், திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே சின்னம்மா, சின்னா ஆகியோரை மடக்கிப் பிடித்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்றனா். அப்போது ஆந்திர மாநில போலீஸாா் சீருடையில் இல்லாததாலும், அவா்களிடம் துப்பாக்கி இருந்ததாலும் பொதுமக்கள் ஆந்திர மாநில போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது அவா்கள் தாங்கள் ஆந்திர மாநில போலீஸாா் எனக்கூறினா். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ஆந்திர மாநில போலீஸாரிடம் சம்பவம் குறித்துக் கேட்டறிந்தனா்.
இதைத் தொடா்ந்து ஆந்திர மாநில போலீஸாா் சின்னம்மா, சின்னா ஆகியோரை காரில் ஏற்றிச் சென்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...