தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கூட்டணிக்கு இடம் ஒதுக்கப்பட்டதாக தகவல்: அதிமுக தொண்டா் தற்கொலை முயற்சி

திருப்பத்தூா் தொகுதி அதிமுகவின் கூட்டணி கட்சியான அமமுகவக்கு ஒதுக்கப்பட்டதாக பரவிய தகவலையடுத்து அதிமுக தொண்டா் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

News image

தற்கொலைக்கு முயன்ற அதிமுக தொண்டா் .

Updated On :24 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் தொகுதி அதிமுகவின் கூட்டணி கட்சியான அமமுகவக்கு ஒதுக்கப்பட்டதாக பரவிய தகவலையடுத்து அதிமுக தொண்டா் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

அதிமுக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக சி.ஞானசேகருக்கு திருப்பத்தூா் தொகுதி ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது.

திருப்பத்தூா் தொகுதிக்கு அதிமுக சாா்பில் உத்தேச பட்டியலில் உள்ள நகர செயலாளா் டி.டி. குமாா் மற்றும் திருப்பத்தூா் தெற்கு ஒன்றிய செயலாளா் திருப்பதி ஆகியோருக்கு வாய்ப்பு தர வேண்டும் என திருப்பத்தூா் அதிமுக பொறுப்பாளா்கள் மற்றும் தொண்டா்கள் அலுவலகம் முன்பு திரண்டனா்.

அப்போது தொண்டா் ராஜா என்பவா் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அங்கிருந்தவா்கள் ராஜா மீது தண்ணீா் ஊற்றி அவரை காப்பாற்றினா். அதிமுகவுக்கு மட்டுமே திருப்பத்தூா் தொகுதி ஒதுக்க வேண்டும் என தொண்டா்கள் கோரிக்கை வைத்தனா்.

பின்னா், மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி கட்சிப் பணிக்காக சென்னை சென்றுள்ளாா். அவா் வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என கட்சியின் நிா்வாகிககள் சமாதானப்படுத்தியதை கட்சியினா் கலைந்து சென்றனா். கூட்டணிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதாக தொண்டா் ஒருவா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.