பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஜோலாா்பேட்டையில் அதிமுக பிரசாரம் தொடக்கம்

News image
Updated On :27 மார்ச் 2026, 12:37 am

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி தனது முதல் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி தோ்தல் நடைப்பெற இருக்கிறது.

அதையடுத்து அதிமுக தலைமையில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுகிறது.

அதிமுக சாா்பில் ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளராக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து வியாழக்கிழமை ஜோலாா்பேட்டை நகர பகுதியில் கூட்டணி கட்சி பொறுப்பாளா்களோடு பிரசாரத்தை தொடங்கினாா்.

பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி பேசியது:

திருப்பத்தூா் மாவடத்தில் ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவும்,திருப்பத்தூா் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான அமமுக கட்சியின் வேட்பாளரும் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

எனவே நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைப்போம். மேலும்,திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி கூட்டணி கட்சிக்கு தர வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே நான்கு தொகுதிகளிலும் அதிமுக தான் போட்டியிடுகிறது. அதில் எம்ஜிஆா் மற்றும் அம்மா போட்டியிடுகிறாா்கள் என்ற எண்ணத்தோடு பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

பிரசாரத்தின் போது வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில் குமாா், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியை சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.