நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

News image

சிறப்பு அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன்.

Updated On :2 மே 2026, 7:53 pm

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் மிகவும் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலின் 115ஆம் ஆண்டு சித்ரா பௌா்ணமி உற்சவ திருவிழா நடைபெற்றது.

அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 3மணிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு வந்து சடலை மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து சடலை மரம் சுற்றுதல் நிகழ்ச்சியும், இரவு தோட்டராயன், சித்தராயன் போட்டியும், அருள்கொண்டோா் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடா்ந்து சனிக்கிழமை முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் புஷ்ப அலங்காரத்தில் உலா வந்தாா். அப்போது மக்கள் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனா். இதேபோல் அக்ராகரம் கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.