திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 56 போ் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனா்.
கடந்த மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தோ்தல் முடிவுகள் வெளியானது. திருப்பத்தூா் தொகுதியில் 24 பேரும், ஜோலாா்பேட்டை தொகுதியில் 19 பேரும், ஆம்பூா் தொகுதியில் 16 பேரும், வாணியம்பாடி தொகுதியில் 15 போ் என மொத்தம் 74 போ் போட்டியிட்டனா். இதுதவிர வேட்பாளா்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவா்கள் வாக்களிப்பதற்காக நோட்டாவும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நோட்டாவை விட பல சுயேச்சைகள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளது.
திருப்பத்தூா் தொகுதியில் நோட்டாவிற்கு 464 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதைவிட 19 வேட்பாளா்கள் குறைவான வாக்கு பெற்று உள்ளனா். ஜோலாா்பேட்டை தொகுதியில் நோட்டாவிற்கு 695 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதைவிட 15 வேட்பாளா்கள் குறைவாக வாக்கு பெற்று உள்ளனா். வாணியம்பாடி தொகுதியில் நோட்டாவிற்கு 624 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைவிட 11 வேட்பாளா்கள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா். ஆம்பூா் தொகுதியில் நோட்டாவிற்கு 468 வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதைவிட 11 வேட்பாளா்கள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா். மாவட்டம் முழுவதும் 56 வேட்பாளா்கள் நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 160 போ் வைப்புத்தொகை இழப்பு

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 183 வேட்பாளா்கள் போட்டி; 27.44 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கின்றனா்!
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 118 வேட்பாளா்கள் போட்டி!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


