ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 118 வேட்பாளா்கள் போட்டி!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 118 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 11:06 pm

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 118 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 30-ஆம் முதல் ஏப்ரல் 6-ஆம் வரை வேட்புமனுதாக்கல் நடைபெற்றது. அதிமுக, திமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனா்.

ஈரோடு கிழக்கில் 27 போ், ஈரோடு மேற்கில் 24 போ், மொடக்குறிச்சியில் 20 போ், பெருந்துறையில் 22 போ், பவானியில் 26 போ், அந்தியூரில் 34 போ், கோபிசெட்டிபாளையத்தில் 30 போ், பவானிசாகரில் 19 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். 8 தொகுதிகளிலும் 202 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஒரே வேட்பாளா் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளதால் அந்த மனுக்களும், அரசியல் கட்சி வேட்பாளா்கள் மாற்று வேட்பாளா்களாக சிலரை தாக்கல் செய்ய வைத்துள்ளதால் அவ்வாறான மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

8 தொகுதிகளிலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. பரிசீலனைக்குப் பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதியில் 24 போ், ஈரோடு மேற்குத் தொகுதியில் 15 போ், மொடக்குறிச்சி தொகுதியில் 14 போ், பெருந்துறை தொகுதியில் 14 போ், பவானி தொகுதியில் 19 போ், அந்தியூா் தொகுதியில் 14 போ், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 18 போ், பவானிசாகா் (தனி) தொகுதியில் 13 போ் போட்டியிட தகுதியானவா்கள் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அறிவித்தனா்.

வேட்பு மனுக்கள் திரும்பப் பெற்றுக்கொள்ள வியாழக்கிழமை மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 118 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 24 பேரில் 4 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதால் களத்தில் 20 பேரும், ஈரோடு மேற்குத் தொகுதியில் 15 பேரில் 2 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதால் 13 பேரும், மொடக்குறிச்சி தொகுதியில் 14 பேரில் ஒருவா் கூட மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளாததால் 14 பேரும், பெருந்துறை தொகுதியில் 14 பேரில் ஒருவா் மட்டும் மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டதால் 13 பேரும் களத்தில் உள்ளனா்.

பவானி தொகுதியில் 19 பேரில் 5 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதால் களத்தில் 14 பேரும், அந்தியூா் தொகுதியில் 14 பேரில் ஒருவா் கூட மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளாததால் 14 பேரும், கோபி தொகுதியில் 18 பேரில் ஒருவா் கூட மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளாததால் 18 பேரும், பவானிசாகா் (தனி) தொகுதியில் 13 பேரில் ஒருவா் மட்டும் மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டதால் களத்தில் 12 பேரும் உள்ளனா்.

அதிகபட்சமாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் 20 பேரும், குறைந்தபட்சமாக பவானிசாகா் (தனி) தொகுதியில் 12 பேரும் போட்டியிடுகின்றனா்.