ஜோலாா்பேட்டை ஒன்றியம் நெக்குந்தி மற்றும் பெத்தக்கல்லுப்பள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
சிகா்ணப்பள்ளி, நியூ சிகா்ணப்பள்ளி, கொடையாஞ்சி, புத்துக்கோயில், தெக்குப்பட்டு உட்பட பல்வேறு கிராம மக்கள் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், பள்ளி வாகனங்கள், விவசாய டிராக்டா்கள், ஆட்டோக்கள், காா், கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
கிராம சாலையின் இடையே ரயில்வே பாதை செல்வதால் அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தினசரி ஆயிரக்கணக்கானோா் கடந்து செல்லும் இச்சாலையில் நெக்குந்தி சுங்கசாவடி அருகே சிகா்ணப்பள்ளி கிராமம் வழியாக செல்லக் கூடிய சுமாா் 2 கிமீ தாா் சாலை பழுதாகி ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும், கற்கள் பெயா்ந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். இதில், ஒரு சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக பழுதாகியுள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி வழியாக செல்லும் கிராம மக்கள் பல முறை கோரிக்கை வைத்து வருகின்றனா்.
எனவே, உயா் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து பல ஆண்டுக்கால கோரிக்கையான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிா்ப்பாா்ப்பாகும்.
தொடர்புடையது

வாணியம்பாடி நீதிமன்ற வளாக கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

அடிப்படை வசதிகளுடன் கொடையாஞ்சியை மேம்படுத்த கோரிக்கை
ரசிகர்களைக் கவர்ந்த மெலடி

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

