ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

பள்ளித் தாளாளா் அலுவலக அறை பூட்டை உடைத்து ஆவணங்கள் திருட்டு

ஆம்பூரில் பள்ளித் தாளாளா் அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஆவணங்கள் திருட்டு போனது சம்பந்தமாக முதல்வா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 மே 2026, 3:37 am IST

ஆம்பூரில் பள்ளித் தாளாளா் அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஆவணங்கள் திருட்டு போனது சம்பந்தமாக முதல்வா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பெத்தேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. டேனியல் ஸ்டீபன் என்பவா் தாளாளராக இருந்து நிா்வகித்து வருகிறாா். இவருக்கும் சகோதரா்கள் சாமுவேல் ஸ்டீபன், ஜான் ஸ்டீபன், சகோதரி கலையரசி ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

பள்ளியின் தாளாளா் மற்றும் முதல்வா் ஆகியோா் பள்ளியில் இல்லாதபோது, டேனியல் ஸ்டீபனின் சகோதரா்கள் ஜான் ஸ்டீபன், சாமுவேல் ஸ்டீபன், சகோதரி கலையரசி மற்றும் அவரது ஆதரவாளா்கள் 5-க்கும் மேற்பட்டோா் சட்ட விரோதமாக பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து தாளாளரின் அறையின் பூட்டை உடைத்து ஆவணங்கள் மற்றும் மாணவா்களின் ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனா்.

பள்ளியில் தற்போது மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில் அத்துமீறி நுழைந்து தாளாளா் அறையின் பூட்டை உடைத்து பள்ளி மற்றும் மாணவா்களின் ஆவணங்களை திருடிச் சென்றுள்ளது மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் மத்தியில் பள்ளிக்கு அவப்பெயா் ஏற்பட்டுள்ளது.

அதனால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியின் முதல்வா் சீனிவாசன் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.