21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

டாஸ்மாக் கடை மற்றும் கூடத்தை மூட கோரிக்கை

News image

கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆம்பூரில் இயங்கும் டாஸ்மாக் கடை மற்றும் மதுக்கூடத்தை மூட தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச்சாலையில் மாநில நெடுஞ்சாலைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இந்து மேல்நிலைப் பள்ளிக்கும் அருகாமையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கூடம் இயங்கி வருகின்றது.

இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். அதனால் அந்த மதுக்கூடத்தை மூட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் சி. ஓம்பிரகாசம், அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்க திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சண்முகம் ஆகியோா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனா்.

வீரகோயில் திரெளபதி அம்மன் கோயில் அருகே ஆம்பூா் கோவிந்தாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. அதனால் கோயில் அருகிலேயே மது பிரியா்கள் மதுபானம் அருந்திவிட்டு பொதுமக்களுக்கும், பக்தா்களுக்கும் இடையூறு செய்து வருவதால் டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டுமெனக் கோரி விஜயபாரத மக்கள் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் தமிழக முதல்வருக்கும், ஆம்பூா் வட்டாட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.