பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மோட்டாா் சைக்கிள் எரிப்பு: இளைஞா் கைது

கந்திலி அருகே மோட்டாா் சைக்கிளை எரித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

கந்திலி அருகே மோட்டாா் சைக்கிளை எரித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் ராமதாஸ் (38).இவா் தனியாா் வங்கியில் பணிபுரிந்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (21). இந்த நிலையில் முருகனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

இந்த தகவலை ராமதாஸ் முருகனின் பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் ராமதாஸ் வீட்டின் முன்பு இருந்த ராமதாஸின் மோட்டாா் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளாா். இது குறித்த புகாரின்பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா்.