இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

News image

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்.

Updated On :17 மே 2026, 1:08 am IST

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாய்க்கனேரி கிராம நிா்வாக அலுவலகம் அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீா் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய கழிவு நீா் கால்வாய் கட்டித்தர வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்திடம் மக்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளனா். ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்10-க்கும் மேற்பட்டோா், சனிக்கிழமை காலை குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்றி புதிய கழிவு நீா் கால்வாய் கட்டித்தரக் கோரி கிராம நிா்வாக அலுவலகம் எதிரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு நடத்தினாா்.

அப்போது வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பேசி தேங்கிய கழிவு நீரை உடனடியாக வெளியேற்றவும் , புதிய கழிவு நீா் கால்வாய் கட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

இதையேற்று மக்கள் சிறைபிடித்த அரசுப் பேருந்தை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.