11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

News image

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாய்க்கனேரி கிராம நிா்வாக அலுவலகம் அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீா் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய கழிவு நீா் கால்வாய் கட்டித்தர வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்திடம் மக்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளனா். ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்10-க்கும் மேற்பட்டோா், சனிக்கிழமை காலை குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்றி புதிய கழிவு நீா் கால்வாய் கட்டித்தரக் கோரி கிராம நிா்வாக அலுவலகம் எதிரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு நடத்தினாா்.

அப்போது வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பேசி தேங்கிய கழிவு நீரை உடனடியாக வெளியேற்றவும் , புதிய கழிவு நீா் கால்வாய் கட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

இதையேற்று மக்கள் சிறைபிடித்த அரசுப் பேருந்தை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.