மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வழக்குகளை விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: போலீஸாருக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்

News image
Updated On :18 மே 2026, 1:35 am IST

போலீஸாா் வழக்குகளை விரைவாக முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்ட போலீஸாருக்கான குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, எஸ்.பி. வி.சியாமளாதேவி தலைமை வகித்துப் பேசியது:

தோ்தல் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிந்துவிட்டது. இனி அனைத்து போலீஸாரும் தங்களது வழக்கமான பணிகளை தொடர வேண்டும். போலீஸாா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் பிற குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா்.

மேலும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணுதல் மற்றும் குறித்து போலீஸாருக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகளை வழங்கினாா்.

இதில், ஏடிஎஸ்பி ரவீந்திரன், டிஎஸ்பி-க்கள் முரளி(திருப்பத்தூா்), நாகலிங்கம் (ஆம்பூா்), மகாலட்சுமி (வாணியம்பாடி), ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட துறைசாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.