ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மாதனூா் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

மாதனூா் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றியக்குழு தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மாதனூா் பேருந்து நிறுத்தத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :20 மே 2026, 12:04 am IST

மாதனூா் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றியக்குழு தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மாா்க்கத்தில் மாதனூா் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பயணிகள் காத்திருப்பு நிழல்கூரை பகுதியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

பயணிகளுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா். தொடா்ந்து பேருந்து நிறுத்த நிழல்கூரை பகுதியில் தினமும் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினாா்.

ஊராட்சித் தலைவா் குமாா், பணி மேற்பாா்வையாளா் சுரேன் ஆகியோா் உடனிருந்தனா்.