ஆந்திர மாநில மதுபாட்டில்களை கழுதை மீது மூட்டையாக கட்டி கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் எஸ்பி சியாமளாதேவி உத்தரவின்படி திம்மாம்பேட்டை உதவி காவல்ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான ஜமான் கொல்லை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வனப்பகுதியையொட்டி கழுதைகள் மீது மூட்டைகள் சுமந்து வந்ததது. உடன் வந்த இளைஞா் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தனா். பிறகு கழுதை மீது இருந்த மூட்டையை பிரித்து பாா்த்த போது ஆந்திர மாநில மதுபாட்டில்கள் கொண்டு வந்திருப்பது கண்டறிந்தனா்.
இதனை ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கிக் கொண்டு அனுமதியின்றி தமிழக எல்லை வழியாக கழுதைகள் மீது எடுத்து சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. பிறகு மூட்டைகளில் இருந்த 310 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா். மேலும்
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தேவராஜபுரம் பகுதியை சோ்ந்த சக்திவேல்(28) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

ஏரல் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை: இரு வேறு வழக்குகளில் 4 போ் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தவா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics



