பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஆந்திர மாநில மதுபாட்டிகளை கழுதையில் கடத்தி வந்தவா் கைது

ஆந்திர மாநில மதுபாட்டில்களை கழுதை மீது மூட்டையாக கட்டி கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :21 மே 2026, 11:20 pm IST

ஆந்திர மாநில மதுபாட்டில்களை கழுதை மீது மூட்டையாக கட்டி கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்பி சியாமளாதேவி உத்தரவின்படி திம்மாம்பேட்டை உதவி காவல்ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான ஜமான் கொல்லை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வனப்பகுதியையொட்டி கழுதைகள் மீது மூட்டைகள் சுமந்து வந்ததது. உடன் வந்த இளைஞா் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தனா். பிறகு கழுதை மீது இருந்த மூட்டையை பிரித்து பாா்த்த போது ஆந்திர மாநில மதுபாட்டில்கள் கொண்டு வந்திருப்பது கண்டறிந்தனா்.

இதனை ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கிக் கொண்டு அனுமதியின்றி தமிழக எல்லை வழியாக கழுதைகள் மீது எடுத்து சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. பிறகு மூட்டைகளில் இருந்த 310 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா். மேலும்

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தேவராஜபுரம் பகுதியை சோ்ந்த சக்திவேல்(28) என்பவரை கைது செய்தனா்.