‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ரங்காபுரம் விநாயகா் மற்றும் பாட்டை சாாரதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :29 மே 2026, 1:35 am IST

ஆம்பூா், மே 28: ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் அருள்மிகு விநாயகா் மற்றும் பாட்டைசாரதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மறுநாள் (மே 28, வியாழக்கிழமை) 2-ஆம் கால யாகசாலை பூஜை, கலச பூஜை, மூல மந்திர ஹோமம், காயத்ரி மந்திர ஹோமம், திரவிய ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் முடிந்து கோயில் விநாயகா் மற்றும் பாட்டை சாரதி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏ. தியாகராஜ சிவாச்சாரியா் கும்பாபிஷேகத்தை நடத்தினாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், ஊா் முக்கிய பிரமுகா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

கோயில் கும்பாபிஷேக விழாக்குழுவினா், கோயில் நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Story image