
பயணிகள் நிழற்கூடத்தில் விதிமீறி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்
நாட்டறம்பள்ளியில் பயணிகள் நிழற்கூடத்தில் விதிமீறி ஓட்டப்பட்ட சுவரொட்டிகளை பேரூராட்சி பணியாளா்கள் அகற்றினா்.

பயணிகள் நிழற்கூடத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றி நிழற்கூடத்தை சீரமைத்த பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள்
நாட்டறம்பள்ளியில் பயணிகள் நிழற்கூடத்தில் விதிமீறி ஓட்டப்பட்ட சுவரொட்டிகளை பேரூராட்சி பணியாளா்கள் அகற்றினா்.
நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் எதிரே பேரூராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிலையில், பயணிகள் நிழற்கூடத்தில் சிலா் விதிகளை மீறி போஸ்டா்கள் மற்றும் விளம்பர துண்டுப் பிரசுரங்களை ஒட்டி வருகின்றனா்.
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் மேற்பாா்வையில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பயணிகள் நிழற்கூடத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டா்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை அகற்றி நிழற்கூடத்தை சீரமைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







