அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாவட்டத்தில் இன்று 11 இடங்களில் 'அம்மா' திட்ட முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 11 இடங்களில் 'அம்மா திட்ட முகாம்' இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :9 நவம்பர் 2017, 10:01 pm

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 11 இடங்களில் 'அம்மா திட்ட முகாம்' இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
அனைத்து கிராம மக்களும் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே மனு அளிக்கும் வகையில் அம்மா திட்டம் என்ற வருவாய் திட்ட முகாம் வாரந்தோறும் குறிப்பிட் ட கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 
இதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் வட்டந்தோறும் 11 கிராமங்களில் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் முகாம் நடைபெற இருக்கிறது. 
இதன்மூலம், வருவாய்த் துறையின் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னைகள், நிலம் சம்பந்தமான பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம். இக்கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியானோருக்கு நலத்திட்ட உதவிகள் அன்றைய தினமே வழங்கப்பட உள்ளது. 
மேலும், உடனடித் தீர்வு காணப்படாத மனுக்கள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு 30 நாள்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். 
இந்த முகாம், பொன்னேரி-பெருங்காவூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருத்தணி - முத்துகொண்டாபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில், பூந்தமல்லி-கூடப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில், ஊத்துக்கோட்டை-கூனிப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், கும்மிடிப்பூண்டி-மணலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில், திருவள்ளுர்-ஆயலூர் கிராமத்தில் சமுதாயக்கூடத்திலும், 
ஆவடி-அரக்கம்பாக்கம் கிராமம் சமுதாயக்கூடத்திலும், பள்ளிப்பட்டு-வேணுகோபாலபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், மதுரவாயல்-ராமாபுரம் வார்டு 155-இல் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், திருவொற்றியூர்-சின்னசேக்காடு சமுதாயக்கூடத்திலும், மாதவரம்-கதிர்வேடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் அருகிலும் வருவாய்த் திட்ட முகாம் நடைபெற உள்ளது. 
அதனால், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு மனுக்களை அளித்து உரிய பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.