திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

சுதந்திர தின விழா: ரூ.52.1 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆட்சியர் எ.சுந்தரவல்லி தேசியக் கொடியேற்றி வைத்து, பயனாளிகள்

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆட்சியர் எ.சுந்தரவல்லி தேசியக் கொடியேற்றி வைத்து, பயனாளிகள் 83 பேருக்கு 52.1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 
 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் 72-ஆவது  சுதந்திரதினவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
இந்த விழாவிற்கு ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி வைத்தார். அதையடுத்து மூவர்ண பலூன்களையும்,  சமாதானப் புறாக்களையும் பறக்கவிட்டார். பின்னர் காவல் துறையினர் மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். 
      இதைத் தொடர்ந்து, முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.1,12,750  நிதி உதவி,  5 பேருக்கு ரூ.42 ஆயிரத்தில் விலையில்லா தையல் இயந்திரங்கள், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 15 பேருக்கு ரூ.7.50 லட்சம் உதவி, தாட்கோ மூலம் 2 பேருக்கு ரூ.16,57,834 மதிப்பில் வாகனக் கடன் உதவி,  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 24.40 லட்சம் உதவி, 5 பேருக்கு ரூ.25,090 மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டி, மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு ரூ.7,400 மதிப்பில் உபகரணங்கள், தேசிய வேளாண் பாதுகாப்புத் துறையின் மூலம் 13 பேருக்கு ரூ.1,45,060 மதிப்பில் வேளாண் கருவிகள், தோட்டக்கலைத்துறை மூலம் 4 பேருக்கு ரூ.21ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள், 25 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவு என மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.52.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு துறைகளில்  சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களைப் பாராட்டி நற்சான்றுகளையும் அவர் வழங்கினார். 
 தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, சார்-ஆட்சியர் ரத்னா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் குணாளன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தில்லைநடராஜன், சிலம்பரசன், பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.